காஞ்சிபுரம் அருகே லாரி மோதி மாணவி மரணம் - லாரி தீ வைத்து எரிப்பு
காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவி லாரி மோதியதில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரியை கிராம மக்கள் தீ வைத்து.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள செங்கல்பட்டு, திருமுக்கூடல் சாலையில் பள்ளி முடித்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மீது லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே மாணவி பலியானார்.
பிரேமா என்ற 10ம் வகுப்பு மாணவி பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மாணவியின் மீது மோதியது.
இதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை தீ வைத்து கொளுத்தினர்.
மேலும், லாரி ஓட்டுநரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பத்தை தொடர்ந்து போலீசார் மாணவியின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.