ஜல்லிக்கட்டு அப்பீல் விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகதது ஏன்? கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான நேற்றைய விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தால் அனுமதி பெற்றிருக்க முடியும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை உள்ளகரத்தில் பொதுமக்களுக்கு கனிமொழி இன்று பொங்கல் பரிசுகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு தடைக்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம். கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தி.மு.க. அரசு போராடி அனுமதி பெற்று தந்தது.

Kanimozhi blames TN govt. on Jallikattu issue

ஆனால் இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளபோது அ.தி.மு.க. அரசு சரியான சட்டரீதியான முறையில் அணுகாததுதான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. ஜல்லிக்கட்டு மனு மீதான விசாரணையின்போது பீட்டா அமைப்பினரின் வழக்கறிஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

ஆனால் தமிழக அரசு சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று இருக்க முடியும்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+