திமுக தலைவராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உள்ளது: கனிமொழி புகழாரம்
சென்னை: திமுகவின் வழி நடத்தக் கூடியவராக மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி என்பதில் சந்தேகம் இல்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
திமுக பொதுக்குழுவில், மு.க.ஸ்டாலின் அக்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்கினர். கனிமொழி பேசும்போது கூறியதாவது: மனதில் முகத்தில் புன்னகையை புகட்டக்கூடிய வாய்ப்பை இந்த நாள் கொடுத்திருக்கிறது. இவர் என் தலைவர், இவரைப் பெற்றிருப்பதற்கு எத்தனை பேறு பெற்றிருக்கிறேன் என்று நெகிழ்கிறேன். உச்சி சூரியனை இயற்கை பறித்துக் கொண்டது.

இருள்மை கவிழ்ந்தது, திசையறியா காட்டில் தமிழ் இனமே நின்று கொண்டிருந்தது. கிழக்குச் சூரியனாக இப்போது உதித்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின்.
திமுகவின் வழி நடத்தக் கூடியவராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி என்பதில் சந்தேகம் இல்லை. யாருக்கும் இதில் எந்த சந்தேகமும் இருந்ததில்லை.
தலைவர் பதவி பொறுப்பை ஸ்டாலின் ஏற்றிருப்பது சடங்குதான்.
கட்சிக்கு முன் நாம் எதுவும் இல்லை. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு, ஒரு முகமறியா முதல்வர் முன்பு போய் நின்றார் ஸ்டாலின்.
பிரதமர்களையெல்லாம் உருவாக்கிய தலைவருக்காக, பிரதமரை தமிழகத்திலேயே கால் வைக்கவிடாமல் விரட்டிய ஸ்டாலின், ஒரு முதல்வர் முன்பாக போய் தழுதழுத்த குரலில், கருணாநிதிக்கு இடம் கேட்டார்.
தளபதியாக பிரதமரையே தமிழகத்தில் கால் வைக்க விடாமல் செய்தவர் ஸ்டாலின். ஆனால், ஒரு தலைவராக, கருணாநிதிக்கு மெரினாவில் இடம் பெற்று கொடுத்தார். அவர்கள் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் எல்லாம் போராட்டம் நடத்தலாம் என கூறினோம். ஆனால், ஸ்டாலின் சட்டத்தின் உதவியை நாடினார்.

ஸ்டாலின் கோபப்பட்டிருந்தால், அன்றையதினம் மொத்த தமிழகமும் ஸ்டாலின் பின்னால் வந்திருக்கும். எத்தனை உயிர்களை இழந்திருப்போம். மனசாட்சியற்ற ஆட்சியாளர்கள் இங்கே இருக்கிறார்கள். எனவே துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கும். ஆனால், ஒரு தலைவனாக அதுபோன்ற சூழலை தவிர்த்து, கருணாநிதியின் ஆசையை நிறைவேற்றினார். கண்ணியத்தை காத்து தலைவராக நிமிர்ந்து நின்றார். மகனாகவும், தலைவராகவும் நிரூபித்த தருணம் அது. ஒரு தலைவர் என்பதற்கு இலக்கணம் அது. இவ்வாறு கனிமொழி பேசினார்.
-
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை!












Click it and Unblock the Notifications