அண்ணா சாலையில் நடு ரோட்டில் அமர்ந்து கனிமொழி போராட்டம்... கைது #TamilNaduBandh
சென்னை: சென்னை அண்ணா சாலையில் இன்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதானார்கள்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை திறந்து விடக் கோரியும் இன்று விவசாய அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் கடையடைப்புப் போராட்டத்திற்க அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு திமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.

திமுக சார்பில் இன்று கட்சியின பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.

சென்னையில் அண்ணாசாலையில் இன்று திமுகவினர் கனிமொழி தலைமையில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடு ரோட்டில் அமர்ந்து கனிமொழி உள்ளிட்ட மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications