கடல் சீற்றம்... குமரியில் 3 - வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 3-வது நாளாக புதன்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக கடற் பகுதிகளாகிய ராமநாதபுரம் மாவட்டம் முதல் குமரி மாவட்டம் வரையிலான கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதியில் சூரை காற்றுடன் கடல் சீற்றம் காணப்பட்டது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆரோக்கியபுரம் முதல், நீரோடி வரை மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் சீற்றம் நீடித்து வருகிறது. புதன்கிழமை காலை அலைகள் ஆக்ரோஷமாக எழுந்ததால் காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து இரண்டரை மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்குத் தொடங்கியது.
ஆனால், 11.30 மணிக்கு மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்னர், பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்கிய படகுப் போக்குவரத்து மாலை 4 மணிவரை நடைபெற்றது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைப் பகுதியில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் அங்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றத்தால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications