தண்ணிர் திறப்பை நிறுத்தாவிட்டால் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம்- கன்னட அமைப்பு எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: தமிழக அரசுப் பேருந்துகள் இன்று ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பல்வேறு கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபலேவில் முதல்வர் ஜெயலலிதா படத்தை எரித்து தமிழர்களுக்கு மிரட்டல் விடுத்துப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறப்பதை நிறுத்தாவிட்டால் கர்நாடகத்தில் தமிழர்களை வீடு புகுந்து தாக்குவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு பகிரங்கமாக எச்சரித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
அத்திபலே இன்று போர்க்களம் போலக் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்தபடி உள்ளன. இன்றும் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்தும், அவரது உருவப் படத்தை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று காலை 200க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் திரண்டு வந்து போராட்டத்தில் குதித்தனர். ஓசூர் வழியாக கர்நாடகத்திற்குள் எந்த வாகனமும் நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் எந்த வாகனமும் செல்லவில்லை. இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டன.
அனைத்து வாகனங்களும் ஓசூருடன் நிறுத்தப்பட்டன. தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில் வன்முறையும் போராட்டமும் குறைந்தால்தான் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1991 போன்ற கலவரத்தை சந்திக்க நேரிடும் என்று தமிழர்களின் வீடுகள், நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு எச்சரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications