தாய் மொழியை மதிக்காமல் பச்சை தமிழன் என சொல்வதா.. கர்நாடகாவில் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: நான் பச்சை தமிழன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ஊடகங்களும், கன்னட அமைப்புகளும், அவரது பேச்சை கடுமையாக விமர்சனம் செய்கின்றன.
சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட, நடிகர் ரஜினிகாந்த், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்படி பேசும்போது, ரஜினிகாந்த் தன்னை பச்சை தமிழன் என அறிவித்துக்கொண்டார்.
நான் கர்நாடகாவில் 23 வருடம் இருந்தேன். 44 வருடகாலம், தமிழகத்தில் உள்ளேன். என்னை நீங்கள் தமிழனாக மாற்றிவிட்டீர்கள். தமிழகத்தை தவிர வேறு எங்கும் நான் போக மாட்டேன். அப்படியே என்னை போகச்சொன்னால், சித்தர்கள் வாழும் இமயமலைக்குத்தான் போவேன் என்றார் ரஜினி.

கர்நாடகாவில் அதிர்வலை
இந்த நிலையில் ரஜினிகாந்த் பேச்சு, கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மீடியாக்களை, ரஜினி கர்நாடகாவை குறைத்து மதிப்பிட்டு பேசிவிட்டதாக அங்கு செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன.

ஜெய் கர்நாடகா எதிர்ப்பு
ஜெய் கர்நாடகா என்ற கன்னட அமைப்பின் நிர்வாகி ஜெகதீஷ் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், கர்நாடகாவில் பிறந்தவர்கள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர். பல தொழில்களில் கன்னடர்கள் சாதனை படைத்துள்ளனர். கர்நாடகாவில் பிறந்தவர் இவர். எனவே அவர் கர்நாடகாவுக்குதான் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பிற மொழிக்கு முக்கியத்துவமா?
மேலும் அவர் கூறுகையில், பிறந்த மாநிலத்தை மதிக்க வேண்டும், மறக்க கூடாது. சொந்த மொழியை தவிர்த்து, வேறு ஒரு மொழிக்கு முன்னுரிமை கொடுத்திருக்க கூடாது. பிறந்து வளர்ந்த நிலம்தானே எல்லாவற்றுக்கும் அடிப்படை. அது இல்லாமல் யாரும் வளர்ந்திருக்க முடியாது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், கன்னடர் என்ற மொழி உணர்வுதான் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ரஜினி, இப்படி பேசியிருக்க கூடாது என்றார்.

அரசியலுக்கு வருவது நிச்சயம்
கன்னட செய்தி சேனல்கள் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நிச்சயம் என செய்தி ஒளிபரப்பி வருகின்றன. சில சேனல்கள் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முற்பட்டன. ஆனால் அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications