10ம் வகுப்புத் தேர்வில்... காரைக்குடி நகராட்சி பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று அசத்தல்!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 60 பேரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
இதில், 23 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 6 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 5 பேர் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
பள்ளியிலேயே முதல் மாணவியாக எஸ்.பொன்மலர் சந்தியா (477) வந்துள்ளார். இரண்டாவது இடத்தை எஸ்.நாளிதா பானு (473) பெற்றுள்ளார். 462 மதிப்பெண்களைப் பெற்ற ஏ.ரூபாஸ்ரீ மற்றும் பி.சினேகா 3வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முதலிடம் பிடித்த எஸ்.பொன்மலர் சந்தியா பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 477
தமிழ் - 94
ஆங்கிலம் - 88
கணிதம் - 98
அறிவியல் - 98
சமூக அறிவியல் - 99
இரண்டாவது இடத்தைப் பிடித்த எஸ்.நாளிதா பானு பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 473
தமிழ் - 98
ஆங்கிலம் - 81
கணிதம் - 97
அறிவியல் - 97
சமூக அறிவியல் - 100
மூன்றாவது இடத்தைப் பெற்ற ஏ. ரூபாஸ்ரீ பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 462
தமிழ் - 96
ஆங்கிலம் - 79
கணிதம்- 94
அறிவியல் - 94
சமூக அறிவியல் - 99
பி. சினேகா பெற்ற மதிப்பெண்கள்:
மொத்தம் - 462
தமிழ் - 95
ஆங்கிலம் - 75
கணிதம் - 97
அறிவியல் - 96
சமூக அறிவியல் - 99
வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே!