For Daily Alerts
Just In
காரைக்குடி விடுதியில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தவர் கைது - வீடியோ
காரைக்குடியில் தனியார் விடுதி ஒன்றில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த சையது என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்குடி: தனியார் தங்கும் விடுதியில் சந்தேகப்படும் வகையில் 30 லட்சம் ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சையது பஷீர் என்பவர் காரைக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அவருடைய நடவடிக்கைகள் சந்தேகப்படும் படி இருந்ததால் விடுதி நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனையடுத்து அங்கு வந்த போலீசார், சையது பஷீர் தங்கிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ரூ.30 லட்சம் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக இருந்துள்ளது. அதுகுறித்து போலீசார் அவரிடம் கேட்ட போது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.
அதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary
In Karaikudi police arrested Sayed who had huge amount of money without proper records.
Story first published: Thursday, August 31, 2017, 15:45 [IST]