தூய்மையான பாரதம், தூய்மையான தமிழகம்.. காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியில் பேச்சுப் போட்டி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி நகராட்சி மூலம் தூய்மையான பாரதம் தூய்மையான தமிழகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையேற்றார். காரைக்குடி நகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ சிறப்புரை ஆற்றினார்.

மாணவி பிருந்தா தூய்மையான பாரதம், தூய்மையான தமிழகம் பற்றி பேசினார். தூய்மையான பாரதம், தூய்மையான தமிழகம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.
பேச்சுப் போட்டியில் 8 ஆம் வகுப்பு மாணவி பிருந்தா முதலிடமும், 8 ஆம் வகுப்பு மாணர் பிரசாந்த் இரண்டாமிடமும், 6ஆம் வகுப்பு மாணவி ஹரிணி பிரியா முன்றாமிடமும் பெற்றார்கள்.

கட்டுரைப் போட்டியில் 9ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி முதலிடமும், 9ஆம் வகுப்பு மாணவி மகாலெட்சுமி இரண்டமிடமும், 9ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷ் முன்றாமிடமும் பெற்றார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரைய கோமதி செய்திருந்தார்.
மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா துவங்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். பயிற்சியை ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜானகி ராமன் வழங்கினார். மாணவர்கள் வாழ்கையில் இலக்குகளை நிர்ணயித்து, இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் கனிமொழி நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications