குடும்பப் பிரச்சினை... காரைக்குடி கோயிலுக்குள் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

குடும்பப் பிரச்சினை காரணமாக காரைக்குடி அருகே கோயிலுக்குள் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: காரைக்குடி அருகே கோயிலுக்குள் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவருக்கும், வள்ளிக்கண்ணு (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

Karaikudi woman commits suicie in temple

இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் சோகத்தில் இருந்துள்ளன.ர்

இந்நிலையில், நேற்று மாலை கொத்தமங்கலத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்ற வள்ளிக்கண்ணு, யாரும் எதிர்பார்க்காத வேளையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

வள்ளிக்கண்ணுவின் திடீரென தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டதால், கோயிலுக்கு வந்திருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த செட்டிநாடு போலீசார், வள்ளிக்கண்ணுவின் கடைசிக் கடிதத்தைக் கைப்பற்றினர். குடும்பப் பிரச்சினை காரணமாக வள்ளிக்கண்ணு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வள்ளிக்கண்ணுவின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+