கல்லணை கண்ட கரிகாலனுக்கு பிரமாண்ட சிலை தயார்...!

பிரபல சிற்பி கிஷோர் நாகப்பா இந்த கரிகாலன் சிலையை உருவாக்கியுள்ளார். இருக்கிறார். பட்டத்து யானை மீது ராஜா ஏறி வலம் வருவது போல் சிலையை உருவாக்கியுள்ளனர். 8 அடி உயர யானை மீது 6 அடி உயரத்தில் கரிகால் சோழன் கம்பீரமாக அமர்ந்து இருக்கிறார். கையில் வைத்திருக்கும் செங்கோல் மீதும், தலையில் உள்ள கிரீடத்தின் மீதும் சோழர்களின் சின்னமான புலிக்கொடி பறக்கிறது.
வெண்கலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த கரிகாலன் சிலை. சிலை வடிவமைப்பு குறித்து மாலைமலருக்கு சிற்பி கிஷோர் நாகப்பா தெரிவிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதா பென்னி குவிக் சிலை திறப்பு விழாவின் போது கல்லணையில் கரிகால் சோழன் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவரது உத்தரவுப்படி சிலையை வடிவமைத்தோம்.
களிமண்ணில் வடிவம் வார்த்து பிளாஸ்டர் ஆப் பாரீசில் அச்சு எடுக்கப்பட்டது. அந்த அச்சு மீது மெழுகை காய்ச்சி ஊற்றுவோம். அதன் பிறகு நெருப்பில் வைத்து மெழுகை உருக்கி வெளியே எடுத்து விடுவோம். பின்னர் சிலை வடிவ அச்சு மீது வெண்கலத்தை காய்ச்சி ஊற்றி வார்ப்போம். அதே முறையில்தான் இந்த சிலையும் தயாராகி உள்ளது. இதன் எடை சுமார் 3 டன்.
அப்படியே எடுத்து சென்று நினைவு மண்டபத்தில் வைப்பது சிரமம். எனவே யானை தனியாகவும், ராஜா சிலை தனியாகவும் எடுக்கப்பட்டு மணி மண்டபத்திற்குள் வைத்து மோல்டிங் செய்யப்படும் என்றார்.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் இந்த அணையைப் பற்றிப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம் குறித்த உண்மைகளைக் கண்டறிந்தார். காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து மகத்தான அணை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட மாபெரும் அணையைக் கட்டிய கரிகாலன் நினைவாக வடிக்கப்பட்டுள்ள சிலை விரைவில் திறப்பு விழா காணவுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications