கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது ஜனநாயகப் படுகொலைக்கு சமம்: திருமாவளவன்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்திருப்பது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா ஆட்சி அமைத்து இருப்பது, ஜனநாயகப் படுகொலைக்குச் சமம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகப் படுகொலைச்செயல் ஆகும்.

கர்நாடக தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காத நிலையில், அம்மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது ஒருதலைபட்சமான முடிவு.
மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், அவர்களுக்கான ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும் எடியூரப்பா பதவியேற்பதில் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியாக இருக்கிறது. மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களின் தேர்தல் முடிவுகளிலும் பாஜக இதேபோல் நடந்து கொண்டது.
ஆளுநர்களை தங்களது கைப்பாவைகளாக மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய சக்திகள் அனைவரும் ஒன்று திரள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பாஜக கலாச்சார பாசிசத்தை தட்டி எழுப்பி வருகிறது. இது அரசியல் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications