தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை வெளுக்குமாம்.. இந்திய வானிலை மையம் வார்னிங்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக புழுதி புயல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது.

Karnataka, Kerala, Tamil Nadu and Puduchery will get rain in next 5 days: Indian meteorological center

கடந்த வாரம் வீசிய புழுதி புயல் மற்றும் கனமழையால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புழுதி புயல் வீசியது.

இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்றும் உத்தரபிரதேசத்தில் புழுதி புயல் வீசியது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+