கல்வியாளர்களின் எதிர்ப்பு புறக்கணிப்பு... அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடகத்து சூரப்பா நியமனம்!
சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தராக கர்நாடகாவின் எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எம்.கே சூரப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். இவர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமன செய்யப்பட இருக்கிறார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் தற்போது சூரப்பாவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் பழக்கம் இப்போது திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு இப்படி அடுத்தடுத்து வெளிமாநிலத்தவர் திணிக்கப்பட்டதில்லை. சூரப்பா நியமனம் குறித்த தகவல் கசிந்த போதே தமிழக கல்வியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், ஏன் தகுதியான தமிழரே இல்லையா என்று கேட்டிருந்தார்.

ஆனால் இந்த புகார் எதையும் ஆளுநர் கண்டு கொள்ளவில்லை. தமிழக கல்வியாளர்களின் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் இந்த அறிவிப்பால் கல்வியாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். எம்.கே சூரப்பா 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலை. துணை வேந்தராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications