அடக்கம் இல்லையேல் "நெற்றி"யடி கிடைக்கும்: புதிய நிர்வாகிகளுக்கு கருணாநிதி 'வார்னிங் அட்வைஸ்'
சென்னை: தி.மு.க.வில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும்..இல்லையெனில் நெற்றியடி கிடைக்கும் என்று தமது முக நூல் பக்க 'பொன்மொழி' மூலம் மறைமுகமாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமையானவராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ரொம்பவும் பிஸியாகவே இருக்கிறா. பத்திரிகை துறையில் பல்வேறு புதிய எழுத்து நடைமுறைகளை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.

வழக்கமான அறிக்கைகள் மட்டுமின்றி, செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் என்னவெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதையே 'கேள்வி- பதில்' பாணி அறிக்கையாகவும் வெளியிட்டு வருகிறவர்.
தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் நடப்புகளுக்கு ஏற்ப "பொன்மொழி" பாணியில் தனக்கே உரித்தான எள்ளல் நடையுடன் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
புதிய மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எச்சரிக்கையுடன் ஒரு அறிவுறுத்தலை "பொன்மொழி" பாணியில் கருணாநிதி தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில்,
"பாராட்டும் புகழும்
குவியும் போது;
குட்டையான
வாசலுக்குள்- குனிந்து
செல்வது போன்ற
அட்டக்கம் வேண்டும்.
இல்லையேல் நெற்றியடி
கிடைக்கும்
- கலைஞர்"
என்று கூறியுள்ளார்.
கருணாநிதியின் இந்த புதிய பாணியை உற்சாகத்துடன் தி.மு.க. உடன்பிறப்புகள் ரசிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications