மத்திய அமைச்சர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உமிழும் பேச்சுகள் மீது நடவடிக்கை தேவை
கேள்வி: மத்திய பா.ஜ.க. ஆட்சியில், பொறுப்பில் இருப்பவர்களில் சிலர், சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து வெறுப்பைக் காட்டுகிறார்களே?
கருணாநிதி: அது மதச்சார்பற்ற ஓர் அரசுக்கு நல்லதல்ல! ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி. சாவந்த், ராஜிந்தர் சச்சார், பி.ஜி. கோல்சே பாட்டீல், ஹாஸ்பெட் சுரேஷ், ஐ.பி.எஸ். அதிகாரி ஜுலியோ ரிபெய்ரோ, முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப், மூத்த வழக்கறிஞர்கள் இக்பால் சாக்ளா, ஜனக் துவாரகாதாஸ் மற்றும் பலர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதுபற்றி விரிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அந்தக் கடிதத்தில், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாட்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லீம் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அச்சுறுத்தும் விதத்தில் வெறுப்பை உமிழும் வண்ணம் பேசி வருகிறார்கள். மத்திய இணை அமைச்சர் ஒருவர், முஸ்லீம்களை எச்சரிக்கிறோம் என்று மிரட்டியும், அவர்களை ராட்சதர்கள் என்றும், ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறி இறுதி யுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது அரசமைப்புச் சட்டத்தின் 14, 19, 21, 25 பிரிவுகளுக்கு எதிரானதாகும். எனவே உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் சான்றோர் அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள்.
இத்துடன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கத்தரியா, வி.கே. சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ் சிங், முக்தார் அப்பாஸ் நக்வி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகி ஆதித்யநாத் சாக்சி மகாராஜ், அமித் ஷா, மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது அலட்சியப் படுத்தக்கூடிய கருத்தல்ல; மிகுந்த கவலைக்குரியது; பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பாரென்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications