ஸ்ரீரங்கம் தேர்தல்: அராஜக, ஆணவ ஆட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டும்- கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்துக்கு வாக்களிக்க வேண்டுமாறு அக்கட்சித் தலைவர் கருணாநிதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மாலை நடைபெறுகிறது. இத்தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வடைந்தது.

ஆளும் அண்ணா தி.மு.க, தி.மு.க,, மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி இத்தொகுதியில் நிலவுகிறது.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
சிந்திக்கும் திறனும் சீர்தூக்கிப் பார்க்கும் சிறப்பும் கொண்ட திருவரங்கம் தொகுதி வாக்காளப் பெருமக்களே, கட்சி பேதங்களையெல்லாம் பார்க்காமல், நடைபெறுகின்ற அராஜக, ஆணவ ஆட்சிக்கு ஒரு பாடம் கற்பித்திட, உங்களுடைய மேலான வாக்குகளை அன்புத் தம்பி என். ஆனந்துக்கு "உதயசூரியன்" சின்னத்திலே அளித்து, பெரும்பான் மையான வாக்குகளில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications