தமிழகத்தில் எழுத்தாளர்கள் மீது தொடர் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை: தமிழகத்தில் எழுத்தாளர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் எழுத்தாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளர், "மாதொருபாகன்" என்ற நாவல் எழுதியது பற்றி பிரச்சினைகள் எழுந்து, அந்த எழுத்தாளரே மனம் நொந்து, "எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்து விட்டான், இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்" என்று கூறிவிட்டு படைப்புலகிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

அவருக்கு ஆதரவாக தமிழகப் படைப்பாளிகள், "எந்தக் கருத்தையும் விமர்சிக்கவும் எழுதவும் எவருக்கும் உரிமை உண்டு, கருத்துரிமையைக் காப்போம்" என்று குரல் கொடுத்தார்கள். பெருமாள் முருகன் சென்னை உயர் நீதி மன்றத்தில் பிறகு தாக்கல் செய்த மனுவில், தான் அவ்வாறு எழுதியதற்குக் காரணம், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி தன்னைக் கட்டாயப்படுத்தியது தான் என்றும், எழுத்தாளனின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டு மென்றும் கோரியிருந்தார்.
தலைமை நீதியரசர் எஸ்.கே. கவுலும், நீதியரசர் எம்.எம். சுந்தரேசும் இந்த வழக்கில் மூன்று வாரத்திற்குள் தமிழக அரசு உள்ளிட்ட 14 பேர் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த எழுத்தாளர் புலியூர் முருகேசன் எழுதிய ஒரு சிறுகதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். பிரச்சினைகள் மேலும் பெரிதாக ஆகாமல், அரசும், காவல் துறையும் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.
அதே நேரத்தில் எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படவும், அவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்கவும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே












Click it and Unblock the Notifications