பிரஸல்ஸில் பலியான தமிழக இளைஞர் ராகவேந்திரா கணேசன் குடும்பத்தாருக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை: பிரஸல்ஸ் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்தில் தமிழக சாப்ட்வேர் இன்ஜினீயர் ராகவேந்திரா கணேசன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ''பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸல்ஸில் விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் அண்மையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவத்தின்போது சென்னையைச் சேர்ந்த ராகவேந்திர கணேஷ் என்ற கம்ப்யூட்டர் பொறியாளர் காணாமல் போய்விட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக பெல்ஜியம் அதிகாரிகள் 6 நாட்களுக்குப் பிறகு உறுதி செய்துள்ளனர். வேலைக்காக வெளிநாடு சென்ற கணேஷ் அங்கேயே பலியான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது மறைவால் வருந்தும், குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications