சமூக நீதியின் காவலர் கருணாநிதி.. நினைவேந்தலில் நிதிஷ் குமார் பேச்சு
பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்த சமூக நீதியின் காவலர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, என்று நினைவேந்தல் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசினார்.
Recommended Video
சென்னை: பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்த சமூக நீதியின் காவலர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, என்று நினைவேந்தல் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசினார்.
தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி மறைந்த முன்னாள் முதல்வவரும், திமுக முன்னாள் தலைவருவமான கருணாநிதிக்கு தற்போது நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.
இதற்கு கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.இதில் கலந்து கொண்டு கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உரையாற்றினார்.
அதில், சமூக நீதியின் காவலர் கருணாநிதி. பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
பீகாரில் கருணாநிதி மறைவிற்காக 2 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரித்தோம். கருணாநிதி மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. விதவைகள் மறுமணம், ஜமீன்தாரி முறைகளில் முக்கிய பங்கற்றியவர் கருணாநிதி.
50 ஆண்டுகள் ஒரு கட்சி தலைவராக இருந்தது அரிதான சாதனை. 1970களிலேயே ஊரக மின்மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியவர் கருணாநிதி. பீகாரில் மது ஒழிப்பை கொண்டுவந்துள்ளோம், கருணாநிதியும் மது ஒழிப்புக்கு ஆதரவானவர்.
கருணாநிதியின் தமிழக மது ஒழிப்பு கனவை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்போது மது ஒழிப்பை திமுக அமல்படுத்தும் என விரும்புகிறேன், என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல் உரையாற்றினார்.அதில் ஏழ்மையை அகற்ற உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதி பாரத ரத்னாவிற்கு மிகவும் பொருத்தமானவர்.
மத்திய அரசு விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். அவர் தமிழர்களுக்காக கடைசி வரை உழைத்தவர் என்று பாராட்டி உள்ளார்.