தொடர்ந்து சீரான உடல்நிலையில் கருணாநிதி.. 4வது நாளாக தொடரும் சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதிக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைகளுக்கு பின் கருணாநிதியின் உடல்நிலை தற்போது இயல்புநிலையை அடைந்துள்ளது. நேற்று முழுக்க அவரது உடல்நிலை சீராக இருந்தது. நேற்று முதல்நாள் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது.

அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமானது. மருத்துமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
தற்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் 4வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தொடர்ந்து சீராக உள்ளது. நேற்று இருந்தது போல இன்று அவரது உடல்நிலை உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு முன் திமுக தொண்டர்கள் மீண்டும் கூடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications