திமுக கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக் கொள்வோம்: கருணாநிதி
சென்னை: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, ‘ஜனநாயக முற்போக்கு'' கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னர், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க கூட் டணியில் இணைந்து போட்டியிட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்து இருந்தன.

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா.
அப்போது அவர் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுக்குப் பிறகு வேட்பாளர்கள் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் தலா 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தன.
அ.தி.மு.க. சார்பில் அவர்களுக்கு தலா ஒரு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக இருகட்சியினரும் கூட்டாக அறிவித்தனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைமையிலான ‘‘ஜனநாயக முற்போக்கு'' கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
இடதுசாரிகள்...
கேள்வி:- இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுமா?
பதில்:- அழைப்பு விடுக்க கூடாது என்று ஒன்றுமில்லை.
கூட்டணி...
கேள்வி:- வந்தால் கூட்டணியில் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- அழைப்பு விடுக்கப்பட்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications