For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்துக்கு தேவை 200 டிஎம்சி நீர்.. உச்சநீதிமன்றம் தருவதோ 13 டிஎம்சிதானே!

By Mathi
Google Oneindia Tamil News

உச்ச நீதி மன்றம் தற்போது அளித்துள்ள உத்தரவின்படி 13 டி.எம்.சி. தண்ணீர் தான் தமிழகத்திற்குக் கிடைக்கும். ஆனால் 25 இலட்சம் ஏக்கரில் முழுமையாக சாகுபடி செய்ய தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

ஆனால் உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்குப் பின், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அவர்கள் கூறுகையில், "குடிநீருக்கே இல்லை என்கிற போது, எப்படி தினமும் இவ்வளவு தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட முடியும்? கண்டிப்பாக முடியாது; தண்ணீர் திறந்து விடுவதை நாங்கள் நடைமுறைப்படுத்த முடியாது.. நாளை செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக் கிறேன். அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் அரசு நடந்து கொள்ளும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Karunanidhi questions Jayalalithaa on Cauvery issue

உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரத்தில் அந்த மாநில முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்திருக்கிறார். உச்ச நீதி மன்றம், இறுதித் தீர்ப்பைக் கூட அல்ல, இடையில் ஒரு கருத்தைத் தெரிவித்த உடனேயே கர்நாடக மாநில முதலமைச்சர் செய்தியாளர் களிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாகவும், அப்போது என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி தான் அரசு நடந்து கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தமிழக அரசின் சார்பில் முக்கியமான இந்தப் பிரச்சினையில் மிகவும் தேவையான இந்த நேரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை வாய் திறக்காமல் இருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜெயலலிதா; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப் போவதாகவும் தெரியவில்லை. அவரைப் பொறுத்த வரையில் விவசாயிகளின் குறுவை - சம்பா சாகுபடி பற்றியெல்லாம் என்ன கவலை?

மேலும் தமிழக அரசின் சார்பில் அடுத்து என்ன தான் செய்யப் போகிறார்கள் என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. கேட்டால், "நான் பிரதமருக்குக் கடிதம் எழுதி விட்டேன், நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டேன், அத்துடன் என் வேலை முடிந்து விட்டது" என்று சொல்லிக் கை கழுவி விடுவார்கள். உண்மையில் பிரச்சினை தீர்வதற்கு என்ன தான் வழி, என்ன செய்யப் போகிறார்கள், விவசாயிகளின் பிரச்சினை தீருமா? தீராதா?

காவேரியில் தற்போது உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள 13 டி.எம்.சி. தண்ணீர் என்பது போதவே போதாது என்பது அனைவருக்கும் தெரியும். அதைப் பற்றி என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்? விவசாயிகள் சங்கத்தினர் கேட்பதைப் போல சீராய்வு மனு போடப் போகிறார்களா?

சீராய்வு மனு போட்டு, காவேரி கண்காணிப்புக் குழுவால் எவ்விதப் பயனும் இல்லை என்பதால், 13-5-2013க்குள் அமைத்திருக்க வேண்டிய காவேரி மேலாண்மை வாரியத்தையும் - காவேரி ஒழுங்காற்றுக் குழுவையும் மூன்றாண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இப்போதாவது அமைத்திட மத்திய அரசுக்கு அழுத்தமான உத்தரவைப் பெறப் போகிறார்களா?

குறைந்த பட்சம் 50 டி.எம்.சி. தண்ணீரையாவது கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவைப் பெறப் போகிறார்களா? அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்யப் போகிறார்களா? அல்லது பிரதமரிடம் தமிழக அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று அரசியல் அழுத்தம் தரப் போகிறார்களா என்பதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? அந்தப் பதிலைத் தான் இன்று நாடே எதிர்பார்க்கிறது!

English summary
DMK leader Karunanidhi questioning the TN govt stand on Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X