மாநாடு காட்சிகளை டிவியில் பார்த்த கருணாநிதிக்கு உடல்நிலை முன்னேறியுள்ளது.. ஸ்டாலின் தகவல்
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற மாநாட்டு காட்சிகளை பார்த்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை முன்னேறியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: நேற்று நடைபெற்ற மாநாட்டு காட்சிகளை டிவியில் பார்த்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை முன்னேறியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நேற்று முன்தினம் பெருந்துறை சரளை பகுதியில் தொடங்கியது. இந்த மாநாட்டில் திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நேற்று காலை இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் 2-வது நாள் நிகழ்ச்சி ஆரம்பமானது. காலை 10 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் உரையாற்றினர்.
திண்டுக்கல் லியோனி, கனிமொழி, முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பேசினர். இந்நிலையில் ஈரோட்டில் இன்று 118 பேருக்கு திமுக சார்பில் சுயமரியாதை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அப்போது பேசிய அக்கட்சியின் செயலதலைவர் ஸ்டாலின், மாநாடு காட்சிகளை டிவியில் பார்த்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை முன்னேறியுள்ளது என்றார்.
நேற்று மாநாட்டில் திரண்ட கூட்டம் இனிமேல் திமுக மாநாடு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் மண்டல மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.