பட்ஜெட் உரையில் இல்லாத வாசகத்தை பன்னீர்செல்வம் படித்தது ஏன்? கருணாநிதி சுளீர் விளக்கம்
சென்னை: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது பட்ஜெட் உரையில் ஏன் அம்மா அவர்களின் தலைமையிலான ஆட்சியில் என்ற வார்த்தையை சேர்த்து படித்தார் என்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கேலியாக பதில் அளித்துள்ளார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நேற்று ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில், தாக்கல் செய்தார். அப்போது, ஜெயலலிதாவை அம்மா என்று குறிப்பிட்டு, வாழ்த்துப்பா, பாடினார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கே: பொதுவாக நிதி நிலை அறிக்கை படிக்கும்போது, புத்தகத்திலே உள்ள வார்த்தைகளைத்தான் படிப்பார்கள். ஆனால் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் இடைக்கால நிதி நிலை அறிக்கையைப் படிக்கும்போது, அந்த அறிக்கையிலே இல்லாத வார்த்தைகளான, "அம்மா அவர்களின் தலைமையிலான ஆட்சியில்" என்று படித்தாரே?
ப: அவருடைய வேதனை அவருக்கு! அப்படிப் படிக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலை! வேறு ஏதேனும் சோதனைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம்! அம்மா போட்டியிட்ட தொகுதியில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்த அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட கதி அவருக்குத் தெரியாமலா இருக்கும்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications