ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்: கருணாநிதி
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை அறிய சட்ட நிபுணர், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆவலாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணபலம், செல்வாக்கு உள்ளவர் வழக்கில் இருந்து தப்பித்து விடலாம் என மக்கள் கருதுகின்றனர். மக்கள்எண்ணம் தமக்கும் உடன்பாடு என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். செல்வாக்கு உள்ள ஜெயலலிதா, சல்மான்கான் வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டதையும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

சந்தோஷ் ஹெக்டேவின் கருத்து உச்சநீதிமன்றத்துக்கு கொடுத்த எச்சரிக்கை என கருதுகிறேன். நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டதா அல்லது அதனை சீர்படுத்த முன்னுரை எழுதப்பட்டு விட்டதா என்று சில நாட்கள் பொறுத்திருந்து தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்குப்பற்றி நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவிக்க என்ன காரணம் எனவும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications