மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர கருணாநிதி கோரிக்கை
சென்னை: நடப்பாண்டில் மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளி வருவதற்கு முன்பு, இன்று மாணவ, மாணவியர்கள் இந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. இதில் 1195 மதிப்பெண்கள் பெற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவியும், அதே பள்ளியைச் சேர்ந்த ஜஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். 1,194 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழியில் தேர்வு
ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.

நுழைவுத் தேர்வு சந்தேகம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள இந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் தொடர்ந்து பயிலுவதற்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா என்பது இன்னமும் முடிவாகாத நிலையில் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் கவலையிலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இந்தத் தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று தி.மு. கழக ஆட்சியில் சட்டமியற்றி உருவாக்கப்பட்ட நிலைக்கு மாறாக வேறு ஒரு புதிய நிலை ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு
தொழிற்கல்லூரிகளை நடத்தும் தனியார் சிலர் உச்ச நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வு குறித்து தொடுத்துள்ள வழக்கு இன்னமும் இறுதித் தீர்ப்பினை எட்டாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கையினை விரைவாக எடுத்து, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடருவதற்கு வழி வகைகளைக் காண வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications