மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர கருணாநிதி கோரிக்கை
சென்னை: நடப்பாண்டில் மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளி வருவதற்கு முன்பு, இன்று மாணவ, மாணவியர்கள் இந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி வந்திருக்கின்றன. இதில் 1195 மதிப்பெண்கள் பெற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவியும், அதே பள்ளியைச் சேர்ந்த ஜஷ்வந்த் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளனர். 1,194 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவி பவித்ரா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 1,193 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பேர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மாணவிகள் தேர்ச்சி
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.9 சதவீதம் பேரும், மாணவிகள் 94.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக அளவில் மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழியில் தேர்வு
ப்ளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவியர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டில் மட்டும் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியதற்காக தேர்வுக் கட்டண சலுகை பெற்றுள்ளனர்.

நுழைவுத் தேர்வு சந்தேகம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள இந்த நேரத்தில், மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் தொடர்ந்து பயிலுவதற்கு இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு உண்டா என்பது இன்னமும் முடிவாகாத நிலையில் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் கவலையிலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இந்தத் தொழிற் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று தி.மு. கழக ஆட்சியில் சட்டமியற்றி உருவாக்கப்பட்ட நிலைக்கு மாறாக வேறு ஒரு புதிய நிலை ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு
தொழிற்கல்லூரிகளை நடத்தும் தனியார் சிலர் உச்ச நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வு குறித்து தொடுத்துள்ள வழக்கு இன்னமும் இறுதித் தீர்ப்பினை எட்டாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு உரிய நடவடிக்கையினை விரைவாக எடுத்து, தமிழகத்தில் உள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வின்றி மருத்துவப் படிப்புகளைத் தொடருவதற்கு வழி வகைகளைக் காண வேண்டுமென்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.
-
Kanimozhi: சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? எந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்பு? -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்!












Click it and Unblock the Notifications