வெற்றி மீது வெற்றி வந்து இவரைச் சேரும்.. 13வது முறையாக வென்ற கருணாநிதி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இதுவரை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். திருவாரூர் தொகுதியில் அவர் 2வது முறையாகவும், சட்டசபைத் தேர்தலில் 13வது முறையாகவும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
கருணாநிதி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அதில் ஒன்று 12 முறை சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வென்றது. தற்போது 13வது முறையாக தேர்தல் களம் கண்டுள்ள கருணாநிதி அதிலும் வென்றுள்ளார்.

1957ம் ஆண்டு தனது முதல் தேர்தலை குளித்தலைில் சந்தித்தார் கருணாநிதி. அன்று முதல் அதன் பிறகு அவர் சந்தித்த ஒவ்வொரு தேர்தலையும் அவர் வென்று வந்துள்ளார்.
1962 - தஞ்சாவூர்
1967 - சைதாப்பேட்டை
1971 - சைதாப்பேட்டை
1977 - அண்ணா நகர்
1980 - அண்ணா நகர்
(1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் எம்எல்சியாக இருந்தார்)
1989 - துறைமுகம்
1991 - துறைமுகம்
1996 - சேப்பாக்கம்
2001 - சேப்பாக்கம்
2006 - சேப்பாக்கம்
2011- திருவாரூர்
2016 - திருவாரூர்
தமிழகத்தில் எந்தத் தலைவரும் இதுவரை இத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றதில்லை. அந்த வரலாற்று சாதனையை இனி யாரேனும் படைப்பார்களா என்பதும் தெரியவில்லை. அந்த வகையில் கருணாநிதியின் இந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாகும்.
13 தேர்தல்களில் வென்றுள்ள கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்தும் சாதனை படைத்தவர். தற்போது 6வது முறையாக அவர் முதல்வர் பதவியை ஏற்று வரலாறு படைப்பார் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் அது ஏமாற்றத்தில் போய் முடிந்துள்ளது.












Click it and Unblock the Notifications