பாலியல் வழக்குப் புகார்: செங்கோட்டை நீதிமன்றத்தில் கருப்பசாமி பாண்டியன் ஆஜர்
செங்கோட்டை: திமுக பெண் பிரமுகர் கொடுத்த பாலியல் புகார் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோர் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.
நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,அவரது உதவியாளர்.கார்த்திக் ஆகியோர் மீது திமுகவின் பெண் பிரமுகர் தமிழரசி என்பவர் நெல்லை டி.ஐ.ஜி.யிடம் கொடுத்த கருப்பசாமி பாண்டியன் தன்னிடம் குற்றாலத்தில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்று புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அந்த புகார் மீது குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி பாண்டியன்,அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோரைத் தேடிவந்தனர்.இந்நிலையில் அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர்.அந்த முன் ஜாமீனைத் தொடர்ந்து இருவரும் இன்று செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி மாதவ ராமனுஜம் முன்பு காலை 10.20 க்கு ஆஜர் ஆகினர்.அப்போது திமுக தொண்டர்கள் எராளமான வர்கள் திரண்டுவந்தனர்.
நீதிமன்ற வளாகமே பரப்பரப்புடன் காணப்பட்டது.இதனை கவனித்த நீதிபதி அவர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டார்.அதனைத்தொடர்ந்து அவர்களை கட்சியின் பிரமுகர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இருவருக்கும் ஜாமீன் வழங்கி 7தினங்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்ற வாளகத்தை விட்டு வெளியே வந்த கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:
40ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை தன்னால் யாரும் பாதிக்கப் பட்டதில்லை.எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் இந்த போய் புகார் கொடுக்கப்பட்டு அசிங்கப்படுத்தி விட்டதாகவும் ,தான் குற்றவாளியில்லை,என்று நீதிமன்றம் மூலம் நிரூபித்து உண்மைவெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறினார்.
தனது 42 வருட பொதுவாழ்வில் இதுபோன்ற களங்கம் இதுவரை ஏறப்பட்டதில்லை. திருமண வயதில் 3 பேத்திகள் உள்ளனர்.
உச்சிமுதல் உள்ளங்கால் வரை நோய் உள்ளதால் என்னை திட்டமிட்டு பழிவாங்க செய்த செயல் இது. என்மீது தலைமைக்கும்,முக.ஸ்டாலினுக்கும் நம்பிக்கை உண்டு அதனால்தான் உண்மையை விசாரணை செய்து துரோகிகள் 3 பேரை கட்சியை விட்டு தலைமை நீக்கியுள்ளது.
நான் ஒருகாலமும் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டேன்.அப்படி ஏற்பட்டால் உயிர் துறப்பேன் என்றார் கருப்பசாமி பாண்டியன்.