Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேச்சு குளிக்க சோப்பு கூட இல்லை; அரசுக் கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் அரசுக் கலைக் கல்லூரி எஸ்.சி. எஸ்.டி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாகவும், போதிய அடிப்படை வசதியில்லாதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கரூர் திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்காக கல்லூரி அருகிலேயே எஸ்.சி. எஸ்.டி விடுதியும் உள்ளது. இங்கு 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரவில்லை என்றனர்.

Karur government hostel students protest…

மேலும், மாணவர்களுக்கு மாதந்தோறும் சோப் உள்ளிட்டவை வாங்குவதற்காக வழங்கப்படும் ரூபாய் 75 கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாணவர்கள் பல மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று விடுதி அருகில் உள்ள கரூர் திண்டுக்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். சமாதனத்தை ஏற்காத மாணவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+