கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க தொடங்கியுள்ளது. சம்பவ நாளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 போலீசாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முதற்கட்டமாக இன்று 5 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 2026 தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக சில மாதங்கள் தற்காலிகமாக சிபிஐ விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய்யின் தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக கரூரில் உள்ள சுற்றுலா மாளிகை மற்றும் தான்தோன்றிமலை பகுதிகளில் தற்காலிக அலுவலகங்கள் அமைக்கப்பட்டு பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விபத்து நடைபெற்ற வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மீட்புப் பணியில் ஈடுபட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் பெற்றனர்.
மீண்டும் விசாரணையை தொடங்கிய சிபிஐ
அதேபோல், தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சம்பவம் நடைபெற்ற நாளில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோன்று, தற்போதைய தமிழக முதல்வர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். மேலும் அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
இதற்கிடையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமடைந்ததால், விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.
10 போலீசாருக்கு சம்மன்
சில மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. தற்போது விசாரணையின் அடுத்த கட்டமாக, சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. காவல் ஆய்வாளர் சையத் அலி உள்ளிட்ட 2 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 10 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று முதல் கட்டமாக 5 போலீசார் கரூரில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற நாளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் அவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்














Click it and Unblock the Notifications