ஓஎன்ஜிசியே வெளியேறு... கதிராமங்கலம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: கச்சா எண்ணெய் குழாய் பதித்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கதிராமங்கலம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனால் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மற்றும் சுற்று வட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர் போராட்டம்
அய்யனார் திடலில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர் பொதுமக்கள். இந்நிலையில் நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் வேளையில், இப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தை கூட்டினர். அதில் கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

வெளியேறுக
ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக கதிராமங்கலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதால் ஒட்டுமொத்த நீர் வளம், நில வளம் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை மூடிவிட்டு உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும்.

ஆழ்துளை கிணறுகள் கூடாது
கதிராமங்கலம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் விவசாய தேவைக்காகவும், குடிநீர் தேவைக்காகவும், மழை நீர் செறிவூட்டவும் மட்டுமே ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும். வேறு எதற்காகவும் ஆழ்துளை கிணறு பதிக்க அனுமதி இல்லை.

ஆரம்ப சுகாதார நிலையம்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையும் அருகில் இருக்கும் 10 கிராம மக்கள் கூடும் இடமான கதிராமங்கலத்தில் அனைத்து வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும். கதிராமங்கலத்தில் நேரடி அரசுப் பள்ளி அமைய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications