ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு நான் பயப்படமாட்டேன்.. நீக்கியதற்கு காரணம் தேவை.. கேசி பழனிச்சாமி ஆவேசம்
கட்சியில் இருந்து நீக்கியது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சியில் இருந்து நீக்கியது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் அக்கட்சியின் எம்பியுமான கேசி பழனிச்சாமி, காவிரில மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறியிருந்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவும் அதிமுகவும் இணக்கமாக இருந்து வரும் நிலையில் கேசி பழனிச்சாமியின் இந்த கருத்து அதிமுக, பாஜக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேசி பழனிச்சாமி நீக்கம்
இந்நிலையில் கேசி பழனிச்சாமி கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளும் முரணாக செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உத்தரவிட்டனர்.

அச்சப்படமாட்டேன்
இந்நிலையில் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என கேசி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு தான் அச்சப்படமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

நீக்கப்பட்டது செல்லாது
ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும், அதனால் ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சியில் இருந்து நீக்குவது செல்லாது என்றும் கூறினார்.

முன்பே கட்சிக்கு வந்தவன்
எந்த இடத்தில் கட்சியின் கொள்கையை மீறினேன் என ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு முன்பாக கட்சிக்கு வந்தவன் நான் என்றும் கேசி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஓபிஎஸ்,ஈபிஎஸ்க்கு சவால்
மோடியிடம் அதிமுகவை ஓபிஎஸும் ஈபிஎஸும் அடகு வைக்கப் பார்க்கிறார்கள் என்றும் கேசி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் மார்ச் 30ஆம் தேதிக்குள் ஓபிஎஸும் ஈபிஎஸும் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கேசி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications