தமிழக-கேரளா எல்லையில் கடத்தலைத்தடுக்க நடவடிக்கை... மொபைல் சோதனைச்சாவடி தொடக்கம்
செங்கோட்டை: கடத்தலைத் தடுக்க தமிழக கேரள எல்லையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மொபைல் சோதனைச் சாவடி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக கேரளா எல்லை செங்கோட்டை அருகேயுள்ள ஆரியங்கா வழியாக அம்மாநிலத்திற்கு தடை செய்யப்பட்ட எரிசாராயம்,செம்மரக்கட்டை,புகையிலைப் பொருட்கள்,போதை பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வண்ணம் மதுவிலக்கு சோதனைச் சாவடி செயல்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு ரயில்வே பாலம் அமைக்கும் பணியின் போது அந்த சோதனை சாவடி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.அதன்பின் வேறுபகுதியில் போதிய இடவசதி இல்லாமல் சாலையின் ஓரத்தில் டென்ட் அமைத்து மதுவிலக்கு போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அம்மாநில அரசு தமிழக கேரளா எல்லைப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய சோதனை சாவடிகளை கணக்கெடுத்து 12 சோதனை சாவடிகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் 12 கண்டெய்னர்களில் தொலைபேசி, பேக்ஸ், ஜெராக்ஸ், வயர்லெஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு குளிர் சாதனத்தோடு எங்கும் இடமாற்றம் செய்யும் வண்ணம் மொபைல் சோதனை சாவடிகளை அமைத்துள்ளது.
அதன் முதல்கட்டமாக ஆரியங்காவில் அமைக்கப்பட்டுள்ள நவீன சோதனை சாவடி திறப்பு விழா இன்று (புதன்கிழமை) இரவு சுமார் 7 மணியளவில் ஆரியங்காவில் நடைபெற்றது.
அம்மாநில மதுவிலக்கு மற்றும் எக்சைஸ் துறையின் அமைச்சர் பாபு கலந்து கொண்டு மதுவிலக்கு சோதனை சாவடியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுவிலக்குஇணை ஆணையாளர் ஜோசப்,துணை ஆணையாளர் அப்துல் சலாம்,துணை கண்காணிப்பாளர் அனில்குமார்,கொல்லம் மாவட்ட வனத்துறை அதிகாரி கார்த்திகேயன், உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications