காணாமல் போன வேலூர் மாணவர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தது எப்படி?
வேலூரில் காணாமல் போன எம்.டெக் மாணவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் எப்படி சேர்ந்தார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
வேலூர்: கேரளாவை சேர்ந்த வேலூர் கல்லூரி மாணவர் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நசீப். இவர் வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விடுமுறையையொட்டி கேரள மாநிலத்துக்கு சொந்த ஊருக்கு சென்றார்.

பின்னர் விடுமுறை முடிந்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேதி மீண்டும் கல்லூரிக்கு செல்வதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் நசீப்பின் தாயாருக்கு தொலைபேசி ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அப்துல் நசீப் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதால் அவரைத் தேட வேண்டாம் என கூறிவிட்டு அந்த மர்மநபர் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டாராம்.
இதனை தொடர்ந்து கேரள மாநிலம் மலப்புரம் காவல் துறை கண்காணிப்பாளர் தேபேஷ்குமாரிடம் மாணவனின் தாயார் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்துல்நசீப் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி கேரளாவிலிருந்து புறப்படும் திருவனந்தபுரம்- ஹைதராபாத் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
காட்பாடியில் இறங்க வேண்டிய அவர் ஹைதராபாத் வரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஈரானுக்கு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு வலைவிரித்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர கேரளாவில் இருந்து பலர் ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications