திருவிழாக்களில் சக்திவாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை இனியாவது உணர வேண்டும்: வைகோ
சென்னை: பொதுவாக திருவிழாக்களில், மக்கள் குவிகின்ற இடங்களுக்கு அருகில், சக்தி வாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை, இப்போதாவது அனைவரும் உணர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று அதிகாலை ஐந்து மணிக்குத் தொலைக்காட்சியில் கண்ட காட்சியும் செய்தியும் என்னைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில், அதிகாலை 3.30 மணி அளவில் பட்டாசுகள் வெடித்துத் தீப்பற்றியது; 90 பேர் நெருப்பில் கருகி மாண்டனர்; 300 பேர் படுகாயம் அடைந்தனர்; ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நெருப்பு பரவியது; 500 வீடுகள் எரிந்து சாம்பலாகி இருக்கின்றன என்ற செய்தியைக் கேட்டபோது, அங்கே நடைபெற்ற பயங்கரத்தை எண்ணி மனம் பதறியது.

கேரள முதல் அமைச்சர் உம்மண் சாண்டி, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பக்திப் பரவசத்துடன், ஆயிரம் கனவுகளுடன் அம்மனை வேண்டி வழிபட்டு, கோலாகலமாகக் காட்சி அளித்த திருவிழாவில் மனதைப் பறிகொடுத்து மகிழ்ந்த வேளையில், குண்டுகள் விழுவது போல் பட்டாசுகள் வெடித்து நெருப்பில் சிக்கி அவர்களின் உடல் கருக, இதயம் அதிர்ச்சியில் உறைய, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அக்கினி ஜூவாலைகளுக்குள் அலறக் கூட முடியாமல் அதிர்ச்சியில் தவித்துத் துடிதுடிப்பதை மனக்கண்ணால் கற்பனை செய்யும்போது நமக்கு மனம் பதறுகிறது.
பொதுவாக திருவிழாக்களில், மக்கள் குவிகின்ற இடங்களுக்கு அருகில், சக்தி வாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை, இப்போதாவது அனைவரும் உணர வேண்டும். தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், தலைவர்களை வரவேற்கின்ற வகையில் பட்டாசுகள் வெடிப்பதை அனைத்துக் கட்சியினரும் தவிர்க்க வேண்டுகிறேன்.
உயிர் இழந்தவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பலத்த காயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற, அரசும் மருத்துவமனைகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications