திருவிழாக்களில் சக்திவாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை இனியாவது உணர வேண்டும்: வைகோ
சென்னை: பொதுவாக திருவிழாக்களில், மக்கள் குவிகின்ற இடங்களுக்கு அருகில், சக்தி வாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை, இப்போதாவது அனைவரும் உணர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று அதிகாலை ஐந்து மணிக்குத் தொலைக்காட்சியில் கண்ட காட்சியும் செய்தியும் என்னைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில், அதிகாலை 3.30 மணி அளவில் பட்டாசுகள் வெடித்துத் தீப்பற்றியது; 90 பேர் நெருப்பில் கருகி மாண்டனர்; 300 பேர் படுகாயம் அடைந்தனர்; ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நெருப்பு பரவியது; 500 வீடுகள் எரிந்து சாம்பலாகி இருக்கின்றன என்ற செய்தியைக் கேட்டபோது, அங்கே நடைபெற்ற பயங்கரத்தை எண்ணி மனம் பதறியது.

கேரள முதல் அமைச்சர் உம்மண் சாண்டி, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பக்திப் பரவசத்துடன், ஆயிரம் கனவுகளுடன் அம்மனை வேண்டி வழிபட்டு, கோலாகலமாகக் காட்சி அளித்த திருவிழாவில் மனதைப் பறிகொடுத்து மகிழ்ந்த வேளையில், குண்டுகள் விழுவது போல் பட்டாசுகள் வெடித்து நெருப்பில் சிக்கி அவர்களின் உடல் கருக, இதயம் அதிர்ச்சியில் உறைய, முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் அக்கினி ஜூவாலைகளுக்குள் அலறக் கூட முடியாமல் அதிர்ச்சியில் தவித்துத் துடிதுடிப்பதை மனக்கண்ணால் கற்பனை செய்யும்போது நமக்கு மனம் பதறுகிறது.
பொதுவாக திருவிழாக்களில், மக்கள் குவிகின்ற இடங்களுக்கு அருகில், சக்தி வாய்ந்த பட்டாசு வெடிப்பது எவ்வளவு ஆபத்து என்பதை, இப்போதாவது அனைவரும் உணர வேண்டும். தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், தலைவர்களை வரவேற்கின்ற வகையில் பட்டாசுகள் வெடிப்பதை அனைத்துக் கட்சியினரும் தவிர்க்க வேண்டுகிறேன்.
உயிர் இழந்தவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பலத்த காயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற, அரசும் மருத்துவமனைகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications