எல்லையில் தமிழக “டாஸ்மாக்” - அகற்றக் கோரி கேரளப் பெண்கள் சாலைமறியல்
கோவை: தமிழகத்தில் அமைந்துள்ள கேரளாவின் எல்லையான ஆனைக்கட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி அப்பகுதி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தின் மேற்கு ஓரமாக தமிழகம் மற்றும் கேரளா எல்லையான ஆனைகட்டி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் "டாஸ்மாக்" மதுபானக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு கேரளப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வந்து மது அருந்துகின்றனர்.

இதனால் தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கேரளப் பகுதி பெண்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பெண்கள் தமிழகப் பகுதிக்குள் நுழைந்து டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை கேரள போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதைக் கண்டித்து இப்பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கேரள மாநிலத்தை சோலையூர் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டவில்லை.
அதையடுத்து போலீஸார் 12 பெண்களை கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக தமிழக எல்லையில் துடியலூர் ஆய்வாளர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பினைத் தீவிரமாக்கியுள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications