ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்குகிறாரா குஷ்பு?
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் (அதிமுக) கடந்த 17ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக காங்கிரசை சேர்ந்த குஷ்புவை களமிறக்கலாம் என்று பேச்சு அடிபட்டது.
இதுகுறித்து நடிகை குஷ்பு பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போவதில்லை. கட்சி கூறினால் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஏனெனில், நான் போட்டியிடப்போவதில்லை. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார். இதன்மூலம் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.