For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சும்மா கேட்கணும்னு எதையாவது கேட்காதீங்க: ட்விட்டரில் சீறிய குஷ்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நான் சினிமாவிலேயே போதிய பணம், புகழை சம்பாதித்துவிட்டேன். அரசியலில் தான் சம்பாதிக்க வேண்டும் என இல்லை என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் தனது அன்றைய நடவடிக்கைகளை தெரிவித்து வருகிறார். மேலும் அவரிடம் யாராவது கேள்வி கேட்டால் அதற்கு பதிலும் அளிக்கிறார். குஷ்பு பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்துள்ளார் என்று அண்மையில் பேச்சு கிளம்பியது.

Khushbu is not in politics for money or fame

இந்நிலையில் மோகன் என்பவர் குஷ்புவிடம் ட்விட்டரில் கேட்டிருப்பதாவது,

நீங்கள் பணத்திற்கா, புகழுக்கா அல்லது தாக்குப்பிடிப்பதற்காக அரசியலில் இருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு குஷ்பு அளித்த பதில்,

நான் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் உள்ளேன். சொகுசாக வாழ சினிமாவில் போதிய அளவுக்கு பணம், புகழை சம்பாதித்துவிட்டேன். அதனால் எதையாவது கேட்க வேண்டும் என கேட்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actress turned politician Khushbu tweeted that, 'Been in cinema for 25 yrs hve seen enough fame,made enough money 2 survive wid luxuries..so do not ask jus 4 asking'. She said so why giving reply to a man who asked her about political life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X