மனுஷனா, நாயா?: பள்ளி சுவரில் உச்சா போன டிரைவருக்கு செம டோஸ் விட்ட குஷ்பு
சென்னை: சென்னையில் உள்ள பள்ளிச் சுவரில் சிறுநீர் கழிக்க முயன்ற டிரைவர் ஒருவரை குஷ்பு திட்டியுள்ளார்.
பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வோர், விதிகளை மீறுவோரை கண்டால் நடிகை குஷ்பு கோபம் அடைந்துவிடுவார். தற்போதும் அது போன்று தான் நடந்துள்ளது.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
டிரைவர்
குழந்தைகள் நடந்து செல்கையில் பள்ளிச் சுவரில் சிறுநீர் கழிக்க முயன்ற டிரைவரை பார்த்து திட்டினேன். கொஞ்சமும் நாகரீகமில்லா மிருக செயல்.
|
மௌனம்
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அங்கிருந்த பிறர் அதை பார்த்தும் பேசாமல் இருந்தது தான். இது போன்ற அநாகரீக செயல்கள் நடக்கும் இடத்தை தாண்டி உங்களின் பெண் குழந்தைகளும் செல்கிறார்கள்.
|
பெண்கள்
இது போன்ற ஆண்கள் பெண்களை மதிக்காத, கொடுமைப்படுத்தும் சூழலில் வளர்ந்திருப்பார்கள் என்று தான் தெரிகிறது.
|
நாய்கள்
தெருவில் திரியும் நாய்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இது போன்ற ஆண்களுக்கு நினைவுபடுத்த வேண்டும்.












Click it and Unblock the Notifications