சிறுமியை பலாத்காரம் செய்து, தாயை கொன்று, போலீசாரிடம் தப்பி.. கொடூர கொலையாளி தஷ்வந்த் டைரி
Recommended Video

சென்னை: போலீசாரிடமிருந்து தப்பியோடிய கொடூர கொலையாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாசினி என்ற சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இந்த கொடூரன், தனது தாயையும் கொலை செய்து கொள்ளையடித்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தஷ்வந்தை சென்னை அழைத்துவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக தனிப்படை ஒன்று மும்பை விரைந்துள்ளது. இதனிடையே, தஷ்வந்த் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

கொடூர கொலை
பிப்ரவரி 5ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் 7 வயது சிறுமி ஹாசினி மாயமானார். பிப்ரவரி 8ம் தேதி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்து கொன்ற குற்றச்சாட்டில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அதே மாதத்தில், தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த்
ஆனால், இதுதொடர்பான வழக்கில், செப்டம்பர் மாதம், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் செப்டம்பர் 13ம் தேதி தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கியது.

தாயை கொன்ற தஷ்வந்த்
செப்டம்பர் 14ம் தேதி, ஹாசினியின் பெற்றோரை மிரட்டியதாக தஷ்வந்த் மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி தனது தாயையே கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து தலைமறைவானார் தஷ்வந்த் .

தப்பிய கொலையாளி
தனிப்படை அமைத்து போலீசார் இந்த கொடூரனை தேடினர். டிசம்பர் 6ம் தேதி, தனிப்படை போலீசார் தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர். டிசம்பர் 7ம் தேதி சென்னைக்கு அழைத்து வரும்போது மும்பையில், போலீசாரிடம் இருந்து தப்பினார் தஷ்வந்த்.

கை விலங்கில் துணி
டிசம்பர் 8ம் தேதி, மும்பை அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்யந்த் மீண்டும் கைது செய்யப்பட்டார். கையில் மாட்டியிருந்த விலங்கின் மீது துணியை போட்டு மூடியபடி அவர் சுற்றி வந்துள்ளது தெரியவந்தது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications