'யோவ் ராம்கோபால் வர்மா... எங்க வீரப்பன் வில்லனா?' - எகிறும் கேள்வி, பதறும் முத்துலட்சுமி!!
வீரப்பன் உயிரோடு இருந்த காலம்... சந்தன மரக் கடத்தல் வீரப்பன், கொள்ளையன் வீரப்பன், அவன் இவன்.. என்றெல்லாம் பிரபல பத்திரிகைகளே முன்பு எழுதி வந்தன.
இன்று வீரப்பன் இல்லை.
வீரப்பன் கேரள, கர்நாடக எல்லைச் சாமி... காவல் தெய்வம் என்று அந்தப் பகுதி மக்களே கொண்டாடுகிறார்கள். வீரப்பனுக்கு சிலைகள் வைக்கிறார்கள். சமாதியில் வழிபாடு நடத்துகிறார்கள். பல கட்சிகள் அவரை தமிழ் தேசியவாதி என போற்றுகின்றன. தமிழ் தேசியத் தலைவர்களில் வீரப்பனும் ஒருவர் என்கிறது நாம் தமிழர் கட்சி.

மீடியா இப்போது அவர், இவர் என மரியாதையுடன் விளிக்க ஆரம்பித்துவிட்டது வீரப்பனை. அவரை இப்போது பெரும்பாலானோர் நாயகனாகப் பார்க்கும் சூழலில், மோசமான வில்லனாகச் சித்தரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் கான்ட்ராவர்சியைத் தேடித் தேடி பப்ளிசிட்டி பார்க்கும் ராம்கோபால் வர்மா.
கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் அவர் இப்போது எடுத்துவருவது வீரப்பனின் கதைதான். அதுவும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியிடம் நேரடியாகப் பேசி, வாழ்க்கைக் கதை, சம்பவங்களை வைத்தே படமெடுக்கிறார். ஆனால் எடுக்கும் கோணம் வில்லத்தனமானது.
கன்னட நடிகர் மறைந்த ராஜ்குமாரை வீரப்பன் கடத்திப் போனது, அதன்பிறகு அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது போன்றவைதான் இந்தப் படத்தின் திரைக்கதைக்கு முதுகெலும்பு.
ஆனால் இந்த சம்பவங்களை மகா வில்லத்தனமாக சித்தரிக்கிறதாம் திரைக்கதை. வீரப்பனை மிக மோசமாக வார்த்தைகளில் திட்டும் காட்சிகளும் படத்தில் உண்டாம்.
இதனால்தான் இந்தப் படத்தை தமிழில் எடுக்கக் கூடாது என முடிவு செய்து, கன்னடம் மற்றும் தெலுங்கில் மட்டும் எடுக்கிறாராம் ராம்கோபால் வர்மா.
படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பிறகு, இந்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் வெளிவர ஆரம்பித்துள்ளதால், வீரப்பனை ஆதரிக்கும் அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்தப் படம் எப்படி வெளியாகிறது என்று பார்த்துவிடுகிறோம் என தடை கேட்கவும் தயாராகி வருகின்றன.
'யோவ் மென்டல் ராம்கோபால் வர்மா, எங்க காவல் தெய்வம் வீரப்பனை கேவலமாக சித்தரித்து ஒரே ஒரு காட்சி இருந்தாலும் நீ தீர்ந்த...' என்ற ரீதியில் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனங்கள் பறக்க ஆரம்பித்துள்ளன. இந்தப் படத்தை எடுக்க எழுத்துப் பூர்வ அனுமதி அளித்துள்ள வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கும் சேர்த்தே கண்டனங்கள் வர ஆரம்பித்துள்ளது, அவரை அதிர வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, படத்தில் தன் கணவன் வீரப்பனுக்கு எதிராக ஏதேனும் காட்சிகள் இருந்தால், அதனை எதிர்த்து தடை கேட்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என முத்துலட்சுமி கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications