'மோடி' வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்த கூடங்குளம் மின் உற்பத்தி.. ஒரு 'பவர் ஸ்டோரி'!
கூடங்குளம்: எப்படி நரேந்திர மோடி படு வேகமாக சாதாரண முதல்வர் பதவியிலிருந்து குறுகிய காலத்திற்குள் பிரதமர் பதவிக்கு உயர்ந்தாரோ அதே பாணியில் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே சாதனை அளவை தொட்டு சாதனை படைத்துள்ளது கூடங்குளம் அணு மின் நிலையம்.
160 மெகாவாட் என்ற தொடக்க உற்பத்தியிலிருந்து 9 மாதத்திலேயே 1000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது கூடங்குளம் மின் உற்பத்தி.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கிய முதல் நாள் 160 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டது. பின் படிப்படியாக மி்ன் உற்பத்தி 1000 மெகா வாட்டை எட்டியுள்ளது.
இந்த 9 மாத பயணத்தில் மின் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு வருமாறு...

2013 அக்டோபர் 22
22.10.2013 அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளத்தில் 160 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் இருக்கும் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது.

மின் உற்பத்தி நிறுத்தம்
ஆனால் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதிகாலை 5.40 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

25ம் தேதி மீண்டும் தொடக்கம்
25.10.2013 இரவு 9.43 மணிக்கு 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்.

29ம் தேதி 235 மெகாவாட்
29.10.2013 235 மெகாவாட் உற்பத்தியாக மின் உற்பத்தி உயர்ந்தது. 4.11.2013 அன்று மாலை 232 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியானது.

35 கோடி யூனிட்டாக உயர்ந்தது
26.12.2013ல் 425 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டது. இதுவரை 35 கோடி யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

570 மெகாவாட்
26.1.2014ல் கூடங்குளம் மின் உற்பத்தி 570 மெகா வாட்டாக உயர்ந்தது.

மே 5ம் தேதி 900 மெகாவாட்
5.5.2014ல் 900 மெகா வாட்டாக உயர்வு. இதுவரை 158 கோடி யூனிட் மினசாரம் உற்பத்தி.

1000 மெகாவாட் சாதனை உற்பத்தி
7.6.2014 பிற்பகல் 1.20 மணிக்கு கூடங்குளத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. மேலும் இதுவரை 190 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications