ஜெ. தீர்ப்பிற்காக தள்ளிப்போன கோடை "மலர்க் கண்காட்சி” - சாதகமான தீர்ப்பால் விரைவில் தொடங்கும்?
கொடைக்கானல்: சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக கொடைக்கானல் மலர்கண்காட்சி துவக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சீசனையொட்டி ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு மலர் கண்காட்சி மே 16 ஆம்தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடிக்க கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் அமைச்சர்கள் பங்கேற்பதை உறுதி செய்யாமல் இருப்பதால் விழா நடத்தும் தேதியை முடிவு செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பின் காரணமாக அமைச்சர்கள் மலர் கண்காட்சி விழாவில் பங்கேற்பதை உறுதி செய்யாமல் உள்ளனர். தீர்ப்பை பொறுத்துதான் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்பார்கள். அதனால்தான் மலர் கண்காட்சி தேதியை முடிவு செய்யாமல் உள்ளனர்.
அதிகாரிகள் நிலையில் மே 20 அல்லது 23 ஆம் தேதி கோடைவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் விழா நடைபெறும் தேதியை முடிவு செய்வது அமைச்சர்களின் கையில்தான் உள்ளது" என்றார்.
இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா இன்று விடுதலை செய்யப்பட்டார். எனவே, அமைச்சர்கள் மலர் கண்காட்சியில் பங்கேற்பதை விரைவில் உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications