சிறையில் இருந்தே கொடநாடு கொலையில் ஈடுபட்டது எப்படி.. இருவரை விசாரிக்க கேரளா விரைகிறது போலீஸ்
கொடநாட்டில் கொலையில் தொடர்புடைய, கார் திருட்டு வழக்கில் சிறையில் இருக்கும் இருவரிடம் விசாரணை நடத்த தமிழக போலீஸ் கேரளா விரைந்தது.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் கேரள சிறையில் உள்ள இருவரை விசாரிக்க தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்ட 11 குற்றவாளிகளில் போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர்.
கனகராஜ் என்பவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். சயான் என்பர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை
அவரை கொடநாடு பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கொலை செய்தது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் இதில் தொடர்புடையது தெரிய வந்தது.

கேரள சிறை
இதனைத் தொடர்ந்து கார் திருட்டு வழக்கில் கேரள சிறையில் இருக்கம் இருவரை தமிழக போலீசார் விசாரிக்க திட்டமிட்டனர். ஜெம்சீர், ஜித்தின் ஜாய் ஆகிய இருவரிடம் இன்று விசாரிக்க தமிழக போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

அழைத்து வர..
கேரள சிறையில் இருக்கும் ஜெம்சீர் மற்றம் ஜித்தின் ஜாய், கொடநாடு கொலையில் எப்படி ஈடுபட்டார்கள். எந்தவிதத்தில் அவர்கள் கொள்ளை மற்றும் கொலைக்கு உதவிகளை செய்தார்கள் என்று அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். மேலும், அவர்களை நீலகரி மாவட்டத்திற்கு அழைத்து வரவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ரகசியம்
கேரள சிறையில் இருக்கும் இவர்கள் இருவரும் நீலகிரிக்கு அழைத்து வரப்பட்டு விசாரித்தால் மேலும் பல ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் பல புதிய தகவல்கள் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications