அடுத்தடுத்து மர்ம விபத்து..கொடநாடு கொலையில் சிக்கிய கேரள ஆசாமி டேங்கர் லாரி மோதி படுகாயம்!
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிக்கியுள்ள மற்றொரு கேரள ஆசாமி டேங்கர் லாரி மோதி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாலக்காடு: கொடநாடு பங்களா காவலாளி கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த சாயன் என்பவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு காவலாளி கிஷன்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிக்கிய கார் டிரைவர்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 6 பேர் சிக்கினர். ஆனால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் நேற்று இரவு சாலை விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர் என்கவுண்டரில் பலியானர் என்று சேலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

மற்றொரு விபத்து
இந்தப்பதற்றம் அடங்குவதற்குள் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் தொடர்புடைய மற்றொரு கேரள ஆசாமியான சாயன் என்பவர் கார் ஓட்டிச் செல்லும் போது டேங்கர் லாரி மோதி படுகாயம் அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. சயான் போலீசாரால் தேடப்பட்டு வருவதால் குடும்பத்துடன் தப்பிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருவர் பலி
பாலக்காடு அருகில் நிகழ்ந்த விபத்தில் சாயனின் மனைவி வினுப்ரியா மற்றும் 5 வயதான நீலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். படுகாயம் அடைந்த சாயன் பாலக்காடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மர்மம்
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் தொடர்புடைய அதுவும் ஜெயலலிதாவின் மாஜி கார் ஓட்டுநர் நேற்று இரவுதான் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். அதே பாணியில் மற்றொருவரும் சாலை விபத்தில் சிக்கியுள்ளது, கொடநாடு கொலையில் உள்ள மர்மத்தை மேலும், மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications