நீட் தேர்வு தொடர்பான அரசியல் குழப்பங்களால்தான் மாணவி அனிதா தற்கொலை: கொளத்தூர் மணி
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: நீட் தேர்வு தொடர்பான அரசியல் குழப்பங்களால்தான் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதாக திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம் சாட்டியுள்ளார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் வெடித்துள்ளன. பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அனிதாவுக்கு நியாயம் கோரியும் போராட்டத்தில் குதித்துள்ளன.

தமிழகத்தில் அனிதா மரணத்துக்கு நீதி கோரும் போராட்டங்கள் நடைபெறாத இடமே இல்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நீட் தொடர்பான அரசியல் குழப்பங்கள்தான் அனிதாவின் மரணத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications