சென்னை ஐசிஎப்பில் ரூ.40 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட புதிய ரயில்... கொல்கத்தாவிடம் ஒப்படைப்பு!
சென்னை ஐசிஎப்பில் ரூபாய் 40 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் கொல்கத்தா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொல்கத்தாவிற்கான மெட்ரோ இரயில் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கபட்டு அதன் பணி முடிக்கப்பட்ட நிலையில் இன்று கொல்கத்தா மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது. ரூபாய் 40 கோடி செலவில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலை இந்தியன் இரயில்வே போர்டு தலைவா் ஏ.கே மிட்டல் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார்சிங்கா மற்றும் ஐ.சி.எப் பொது மேலாளர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ரயில் 40 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கொல்கத்தா மெட்ரோவிற்காக ஐசிஎப் 26 ரயில்களை தயார் செய்து அளிக்கவுள்ளது.
இந்த ரயிலில் 358 பேர் பயணிக்க கூடிய வகையில் 8 பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் ஏசி அறைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் ஆட்டோ மேட்டிக் கதவு வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இதே வசதிகளை கொண்ட இரயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் 80 கோடி வரை செலவாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மெட்ரோவிற்கு ஐசிஎப்பில் பெட்டிகள் தயாரிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அதற்காகவே இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநா் நேரில் வந்து கொல்கத்தாவிற்கு அனுப்பிய ரயிலை பார்வையிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications