மோசமான நிதிநிலை தான் ஊழியர்கள் நிலுவைத் தொகைக்குக் காரணமா?... ஈஸ்வரன் கேள்வி?
தமிழகத்தின் மோசமான நிதநிலை தான் போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை அரசு வழங்காததற்கு காரணமா என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயம்புத்தூர் : தமிழகத்தின் மோசமான நிதநிலை தான் போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை அரசு வழங்காததற்கு காரணமா என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது : போக்குவரத்து தொழிலாளர்கள் முன் அறிவிப்பு ஏதுமில்லாமல் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வெளியூர்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் ஆங்காங்கே பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தளவு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்துவிட்டது என்று அமைதியாக இருக்கக் கூடாது. தமிழக முதல்வர் போக்குவரத்துத்துறை சங்கங்களை உடனடியாக அழைத்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சி முடங்கி நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதால்தான் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசால் நிலுவைத்தொகை வழங்க முடியவில்லையா ?. போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையையும், ஊதிய உயர்வையும் வழங்க தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications